பிறந்த நாள் கொண்டாட சிறந்த வழி????????
இன்று சமயபுரம் ரமணி கிருஷ்ணன் மணியக்காரர் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை தன் நண்பர்களுடன்
நவீன் கார்டனில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாடினார்.
வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உறிஞ்சுவதன் மூலம் காற்றுகளை சுத்தப்படுத்தி மரங்கள் எவ்வாறு பூமியில் உதவுவது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நாம் அனைவரும் ஒவ்வொரு சாத்தியமான சந்தர்ப்பத்திலும் மரங்களை நடவேண்டும். நம் ஒவ்வொருவரும் நம் பிறந்த நாளில் ஒரு மரத்தை நட்டோம் என்றால், உலகில் குறைந்தது 7.8 பில்லியன் மரங்கள் விரைவில் கிடைக்கும் என்று ரமணி கிருஷ்ணன் அவர்கள் கூறினார். இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் விசேஷ நாட்களில் ஒரு மரக்கன்றை நட்டு வந்தால் போதும் பசுமையான குளுமையான பாரதத்தை உருவாக்கலாம்.
Share :
Tags :